Followers

Wednesday 8 February 2012

எலும்பு முறிவை ஏற்படுத்தும் வயிற்றுப்புண் மருந்து

 
 


வயிற்றுப்புண் மற்றும் நெஞ்சு எரிச்சலுக்கு பி.பி.ஐ. என்ற ஒருவகை மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மசாசிஸ்ட் மருத்துவ ஆய்வுக்குழு கூறியுள்ளது.


இந்த மருந்துகளை சாப்பிடும்போது மெல்ல, மெல்ல எலும்புகளை பலவீனப்படுத்துவதாகவும், அதன் மூலம் 45 வயதிற்கு மேல் எலும்பு முறிவுகளை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அதிலும் பெண்கள் இந்த மருந்தை சாப்பிட்டால் கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர்.

பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகு அவர்கள் பலவீனமாகி விடுவார்கள். அப்போது இந்த மருந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி இடுப்பு எலும்புகளை சேதப்படுத்துவதாகவும் அதன் மூலம் முறிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
thanks:http://ithayapoomi.org/fullarticle-articleid-5951.html

No comments:

Post a Comment

Popular Posts