Followers

Tuesday 6 March 2012

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு.. இந்த ரெண்டுக்கும் நாட்டு வைத்தியத்துல முழுமையான நிவாரணம்

 

நாட்டு வைத்தியம்!
வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு.. இந்த ரெண்டுக்கும் நாட்டு வைத்தியத்துல முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாமா?

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில போட்டு கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதை சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தை சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்கள்ல எது முடியுதோ அதைச் செஞ்சீங்கன்னா, சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிரும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பெறகு இளஞ்சூட்டுல அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை ராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை ரெண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை பொறுக்குற சூட்டுக்கு ஆற விட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல தினமும் ஊத்திட்டு வரணும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரி கோளாறுகளை சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணியோட விதைகளை ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில ஊற வைக்கணும். காலையில ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.
பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்துல, பொறுக்குற சூட்டுல தெனமும் ராத்திரி பத்து போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டா ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம்.. இந்த ரெண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல பூசி வந்தா நல்ல சொகம் கெடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Posts