Followers

Monday 27 August 2012

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

பரங்கிக்காய் பால் கூட்டு

தேவையானவை 

  • 1 கீற்று பரங்கிக்காய் 
  • 1/2 டம்ளர் பால் 
  • 2 பச்சை மிளகாய் 
  • 2 டீ� ��்பூன் சர்க்கரை 
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல் 

செய்முறை 

            பரங்கிகாயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ,தண்ணீர் சேர்த்துக் குழையாமல் வேக விடவும்.தேங்காய் துருவல் ,பச்சாவ் மிளகாய்  இரண்டையும் அரைத்து ,வேந்த பரங்கிகாயுடன் சேர்த்து கொதிக்க வைத்து ,சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும� �.கடைசியில் பால் விட்டு கலக்கவும்.
Keyword : pumpkin kootu
Read more >>

Tuesday 7 August 2012

உங்கள் பாதங்களை பராமரிக்க எளிய வழிகள்-






நாம் அழகாக இருக்க வே� �்டும் என்று முக அழகிற்கு தனி கவனம் செலுத்துகிறோம். ஆனால் நாம் நம் பாதங்களை மறந்து விடுகிறோம்.   கால்களுக்கு அதிக வேலை கொடுப்பதாலும் அதை சீராக பராமரிக்கவில்லை என்றாலும் அங்குள்ள தோல் பாகம் வறண்டு தடித்து வெடித்து விடுகின்றன. இதைத்தடுக்க நம் வீட்டிலேயே தடுப்பு முறைகளைக் கையாளலாம்.  
• தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு சுடுதண்ணீரில், உப்பு, சிறிதளவு எலுமிச்சைச்சாறு
,  கலந்து பாதங்களை அதில் 10 முதல் 15  நிமிடம் வைத்து பிறகு பிரஷ்சினால் சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பாதங்களை மெல்லிய டவலால் துடைத்து நல ்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.  
• வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி தூள் அல்லது மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உ� ��்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். 
• பாதவிரல்கள் அழுக்காக இருந்தால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். 
• நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.
• பாதம் வீங்கி வலி இருந்தால் ஒரு முழு செங்கல்லை அடுப்பில் சூடு செய்து அதன் மேல் எருக்கு இலைகளை வைத்து இதமான சூட்டில் பாதங்களை வைத்து எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து 2  அல்லது 3  நிமிடத்திற்கு செய்து வந்தால் பாதத்தின் வலி நீங்கும்.  
• கல் உப்பு, இடித்த மிளகு இரண்டையும் சிறு மூட்டைகளாகக்கட்டி சூடாக்க வேண்டும். பாதத்தில் எங்கு வலி இருக்கிறதோ அங்கு வைத்து எடுக்க வேண்டும். இதன்படி செய்து வந்தால் கால்வலி நீங்கும்.  
• பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.  
• கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன், மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி போய் விடும்.
• கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் சேர்ந்து விட்டால் நல்லெண்� �ையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 1  அல்லது 2 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும்.
• நகத்தின் ஓரங்களில் பின் வைத்து சுத்தம் செய்ய கூடாது.இவ்வாறு செய்து வந்தால் பாதத்தின் அழகு குறையும். இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுக்க பாதங்களை சரியாக பராமரிக்க வேண்டும்





Read more >>

Sunday 5 August 2012

கோடைகால உபயோகமான தகவல்கள்





முகத்தையும், கண்களையும் அடிக்கடி கழுவுதல் நல்லது. தனித் தனி டவலை பயன்படுத்தவும்.
* கோடை காலத்தில், மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் அருந்தவும்.
* இரவு வடித்த சாதத்தை, கொஞ்சம் தனியே எடுத்து வைத்து, அதில் வெந்நீர் ஊற்றி மூடி வைத்து, காலையில் அந்த நீரை குடிக்கவும்.
* நன்னாரியை தோல் உரித்து, வெட்டி வேரை சிறு த� �ண்டுகளாக நறுக்கி, தண் ணீரில் போட்டுக் காய்ச்சி, அந்த நீரை ஆற வைத்து, வடிகட்டி, அடிக்கடி குடிக்கலாம்.
* ஐஸ் தட்டுகளில், தண்ணீருக்கு பதில், பழச்சாறை கட்டிகளாக உறைய வைத்து, பழச்சாறில் போட்டுக் குடித் தால் சுவையாக இருக்கும்.
* கரும்பு ஜூஸ் அருந்துவது உட லுக்கு நல்லது; வெப்பத்தை தணிக்கும்.
* பருத்திப் புடவைகளுக்கு கஞ்சி போடும் போது, நீரில் கொஞ் சம் படிகாரத்தை சேர்த்த� �க் கொண்டால், புடவை வெண்மையாக வும், பளபளப்பாகவும் இருக்கும்.





Read more >>

மஞ்சளின் மகிமை




உள்ளத் தூய்மைக்கும், உடல் தூய்மைக்கும் மற்றும் மங்களச் சிறப்புகளுக்கும் நன்கு பயன்பட்டு வரும் அரும்பொருள் மஞ்சள்.
மருத்துவக் கண்ணோட்டத்துடன் மஞ்ச ளின் குணாதிசயங்களைச் சிந்திக்க, இது நம் நல்வாழ்க்கைக்கு சொல்வதற்கரிய பயனுள்ளதாய் இருக்கிறது.
மக்களின் மங்களச் சின்னமாகத் திகழும் மஞ்சள் உடலின் ஆரோக்கியத்தைச் சுட்டிக்காட்டவும், பலவித பிணிகளை குணமாக்கும் அற்புதமான மருந்துப் பொருளாகவும் திகழ்கிறது. மஞ்சளின் குணம் கபத்தைப் போக்குவது, வாதத்தைத தடுப்பது, ரணங்களையும் சொறி சிரங்குகளையும் ஆற்று வது, தாய்ப்பாலை பெருக்குவது, விஷத்தை முறிப்பது, மஞ்சளிலே பல
இனங்கள் உண்டு. அவை கறிமஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மரமஞ்சள், காட்டு மஞ்சள், குரங்கு மஞ்சள், பலா மஞ்சள், காஞ்சிரத்தின் மஞ்சள், நாகமஞ்சள் என்பனவாகும். இவற்றிலே எல்லா மஞ்சளுமே மருத்துவத்திற்கு உகந்தவை. ஆயினும் கூடுதலாக கறிமஞ்சள், மரமஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என்பவையே மக்களினால் பயன்படுத்தப்பட� ��கின்றன.
கறிமஞ்சளிலே ஆண், பெண் என இருபாலும் உண்டு. குடம் போன்ற மஞ்சளை பெண் என்றும், விரல் போன்ற மஞ்சளை ஆண் என்றும் சொல்வார்கள். பெண்கள் பூசிக்கொள்ளப் பயன்படுத்துவது பெண் மஞ்சளைத்தான்.
பெண்கள் மஞ்சளைப் பூசுவதனால் பித்தம், வாதம், வாந்தி தோஷங்கள் அனைத்தும் நீங்குகிறது என்று மருத்துவ சாத்திரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி மஞ்சளினால் மு கத்தில் மினுமினுப்பு உண்டாகும். மற்றும் முகத்தில் தோன்றும் பருக்கள், தேமல்கள் போன்ற சரும வியாதிகளைப் போக்குவது மட்டுமின்றி தூக்கத்திலும் இனிய சுகம் காணலாம். இனி நோய்களையும் அதை விரட்டும் மஞ்சளின் பயன்களையும் பார்ப்போம்.
கஸ்தூரி மஞ்சளை அரைத்துத் தடவிவர முகப்பரு விரைவில் மறையும். அத்துடன் குடமஞ்சளையும் சந்தனத்தையும் குழைத்துத் தடவி வந்தாலும� � பருக்கள் மறையும். சாதாரண மஞ்சள் தூளை பாலேட்டுடன் அதாவது பாலாடையுடன் கலந்து குழைத்து முகத்தில் இரவில் பற்றுப் போட்டுக் கொண்டு படுத்துவிட்டால் காலையில் கழுவி விடலாம். இந்த வகைகளில் முகப்பருக்களை அகற்றலாம்.
பெண்கள் மஞ்சள் பூசிக்கொள்வதனால் முகத்திற்கு வசீகரத்தன்மை ஏற்படுகிறது. வியர்வையால் ஏற்படும் நாற்றம் மறைகிறது. சுவாசிக்கும் காற்றிலுள்ள ந ோய்க்கிருமிகள் அழிவடைகின்றன. நவநாகரிக அழகுசாதனங்களைப் போல் சரும வறட்சியோ, முதுமைக்குரிய குறிகளையோ மஞ்சள் தோற்றுவிப்பதில்லை. பெண்கள் மஞ்சள் குளித்து மஞ்சளாலான குங்குமத்தை அணிந்து கொண்டிருந்தால் பார்வையால் கவரும் தன்மை படைத்த ஹிப்னாடிஸ்களால் கூட கவர முடிவதில்லை. அத்தனை மகிமை இந்த மங்கள மஞ்சளுக்கு.
குழந்தைகளின் கல்லீரல் நோய்களுக்கும், பாண்டு வுக்கும், பசும்பாலில் மஞ்சளைத் தட்டிப் போட்டுக் காய்ச்சிய கசாயத்தைக் கொடுத்துவர குணமாகும். மஞ்சளையும் மிளகையும் சரிசமமாக எடுத்து அரைத்து விழுதை மோரில் கலந்து சாப்பிட்டுவர பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் வரும தலைவலி, வயிற்றுவலி எல்லாம் குணமாகும்.
இரத்தக்கட்டை அதாவது இரத்தம் கண்டினால் அதை நீக்குவதில் மஞ்சளுக்கு நிகரான மருந்து இல்லையென்ற ே சொல்லலாம். டிஞ்சர் அயோடின், டிஞ்சர் பென்சாயினைக் காட்டிலும் சிறப்பாக வேலை செய்கிறது என்றால் மஞ்சளின் பெருமையை என்னவென்று சொல்வது.
மஞ்சள் தூளை நெய் அல்லது பாலோடு கலந்து சாப்பிட்டு வந்தால் சாதாரண தொண்டைப்புண் குணமாகிறது. மஞ்சளையும் வேப்பிலையையும் அரைத்து உடம்பில் ஏற்படும் புண்களின் அரிப்பிற்கு பூசி வரலாம். அம்மை நோயில் கூட அரிப்பு ஏற்படும் ச மயங்களில் மேற்கண்ட முறையை அனுசரித்து வந்தால் அரிப்புகள் அடங்கி, புண்களும் சீக்கிரம் ஆறிவிடும். தொடர்ந்து மஞ்சளைத் தேய்த்து குளித்துவர அம்மைத் தழும்புகளும் மறைந்து போகும். உடலில் ஓடும் இரத்தமும் சுத்தமாகும்.
கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, நெல்லிவித்து, வேப்பமுத்து, கடுக்காய்த் தோல் முதலியவற்றை சம எடை எடுத்து தூள் செய்து தேவையான அளவு எடுத்து பால� �ல் காய்ச்சித் தேய்த்து வாரம் ஒரு முறை நீராடி வர மங்கல்பார்வை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை முதலிய பிணிகள் அணுகுவதில்லை. இத்தகைய நீராடலுக்கு பஞ்சகல்ப ஸ்நானம் என்று பெயர்.
சில சமயங்களில் உடலில் குத்தல் வலிகள் தோன்றும். அநேகமாக வாத மேலீட்டால் அப்படி ஏற்படும். அதற்கு மஞ்சளை 50 கிராம் அளவிற்கு எடுத்து சற்று நசுக்கி அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராக � ��ுண்டும் வரை காய்ச்சி வடிகட்டி சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட குணம் தெரியும். இதே பிணிக்கு மற்றொரு மருத்துவமும் உண்டு. மஞ்சளையும் ஓமத்தையும் சம அளவு எடுத்து நசுக்கி அரை லிட்டர் அளவு நீர் விட்டு கால் லிட்டர் அளவு வரும்வரை சுண்டக் காய்ச்சவும். அதில் 100 கிராம் நல்லெண்ணெய் விட்டு சேர்த்துக் காய்ச்சவும். அது இறுகித் தேன் பதமாகும்போது 10 கிராம் கற்பூரத்தை அதில் பொடி� �்துப் போட்டு இறக்கி ஆறவைத்து உடலில் வாத வலியுள்ள இடங்களில் நன்றாக அழுத்தித தடவித் தேய்த்து வர உடல் வலி மறையும்.
மரமஞ்சளை அரைத்து நீரில் கலந்து உள்ளுக்குச் சாப்பிட்டால் மூல நோய்க்கு சொல்லப்பட்ட அருமருந்தாகும். இதைச் சாப்பிடுவதுடன் ஆசன வாய்ப்பகுதியிலும் தாராளமாகத் தடவலாம். எந்த வகையான மூல நோயும் உடன் சரியாகும்.
மரமஞ்சளை 100 கிராம� �� அளவிற்கு எடுத்து விழுதாக அரைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி தைலமாக தயாரித்து வைத்துக் கொண்டால் இதை புரையோடிப் போன புண்கள், கிரந்திப் புண்கள், கறுப்பு பருக்கள் மற்றும் சரும நோய்கள் அனைத்திற்கும் தடவி வர உடனே குணமாகும்.
ஆஸ்த்மா நோயின் காரணமாக மூச்சிழுப்பும் இரைப்பும் அதிகமாக இருக்கும்போது கஸ்தூரி மஞ்சளை தீயில் சுட்டு புகையை மூ க்கின் வழியாக உள்ளிழுத்தால் உடனே இரைப்பு நிற்கும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் பிறகு அந்தப் பொல்லாத மூச்சுத்திணறல் வரவே வராது. அத்துடன் அதி போதையில் இருப்பவரது போதையை அகற்றவும் இதே முறையைக் கையாள்வதன் மூலம் போதையை அகற்றலாம். இது மட்டுமின்றி இப்புகை காச நோய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து அதன் கடுமையைத் தடுக்கிறது. இதே மஞ்சள் புகையை நாசியின் வழியாக உள்ளிழுத்த� ��ல் தலைவலி, ஜலதோஷம் என்பன சரியாவதுடன் விஷத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் மாறுகிறது.
குழந்தைகள் அவ்வப்பொழுது இருமிக் கொண்டு சிரமப்பட்டால் அதற்கு ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து அதில் சிறிது மஞ்சள் பொடியைத தூவி நான்கு மணிக்கு ஒரு தடவை கொடுத்து வந்தால் போதும் இருமல் உடனே நின்றுவிடும். மற்றும் இந்த மருத்துவத்தினால் தொண்டைப் புண், சளியடைப்பு போன்ற குறைபாடுகளும் நீங்குகிறது.
மஞ்சளை நன்கு கரியாக்கிப் பொடித்து சிறிது உட்கொண்டால் மாரடைப்பு நீங்குகிறது. மேகநோய் அகலுகிறது. காயம், புண், கட்டிகள் இவற்றின் மீது பூசிவந்தால் அவை குணமாகின்றன. மஞ்சள் கரித்தூளை தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட்டு வர மேகப்புண், உடல் சருமத் தடிப்பு, ஊறல் எல்லாம் சரியாகின்றன.
பொன்னி� �மும் மென்சருமமும் பெண்கள் பெற கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயறு, கடலைப்பருப்பு என்பனவற்றை சம அளவில் எடுத்து அரைத்துப் பொடியாக்கி குளிக்கும் போது உடலுக்குத் தேய்த்துக் குளித்து வரலாம். அத்துடன் வியர்வை நாற்றமும் சுத்தமாக அகன்றுவிடும்.
இதுமட்டுமின்றி தற்போதைய விஞ்ஞான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் டெக்சாஸ் என்னும் பல்கலைக்கழகத்தின் எம்.டி.ஆண்டர்சண் புற்று நோய் மையம் நடத்திய ஆய்வில் மஞ்சளுக்கு தோல் புற்று நோயை எதிர்க்கும் ஆற்றல் உண்டு என்று கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளது. தோல் புற்று நோய்க்கு காரணமான "மெலனோமா" என்ற கலங்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தக் கூடிய ஆற்றல் மஞ்சளுக்குண்டு என்றும், புற்று நோய்க்கு காரணமான செல்கள் வளர்ச்சி பெறாமல் தானாகவே அழிந்துவிடக் கூடிய சூழ்நிலையை மஞ்சள் ஏற்படுத்துகிறது என்ப� �ும் ஆய்வில் கண்டறியப்பட்ட அரிய உண்மையாகும். இந்த மையத்தின் பேராசிரியர் பாரத்.
பி.அகர்வால் தகுந்த அளவில் மஞ்சள் சேர்ந்த உணவுப் பொருட்களை உண்பது நமது உடல் நலத்திற்கு உகந்தது என்று தெரிவித்துள்ளார். ஆர்த்தரைட்டிஸ், புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு காரணமான கக்பா-பி என்ற ஒருவகையான சக்தி வாய்ந்த புரதம் தோன்றாமல் இருப்பதற்கு மஞ்சள் உதவி செய்கி� �து என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தாய்ப்பால் அதிகளவில் சுரப்பிக்கச் செய்யும் தன்மையும் இந்த மஞ்சளுக்கு உண்டு. பிரசவித்த பெண்களுக்கு நீராட்டும் போது மஞ்சளைப் பூசிக் குளிப்பதன் மூலமும், உணவில் சேர்ப்பதன் மூலமும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யலாம். உணவில் சேர்ப்பதற்கு உகந்த முறை மஞ்சளும் பூண்டும் சேர்த்து சொதி வைத்துக் கொடுக்கல ாம். இத்துடன் கருவாட்டையும் சேர்ந்தால் அதிக பலன் கிடைக்கும். ராக்கட்டுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு என்பது அதி நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். அப்படிப்பட்ட தாய்ப்பாலையே அதிகளவில் சுரக்கச் செய்யும் தன்மை மஞ்சளுக்கு உண்டெனின் மஞ்சளின் பெருமையை எப்படி வர்ணிப்பது.
மஞ்சளுக்கு காஞ்சனி, அர்சனம், ரஞ்சனி, பீதம், கோ ணிதம் என்ற மருத்துவப் பெயர்களுமுண்டு. சங்க நூல்களிலேயே மஞ்சள் கிழங்கைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. "சிறுபசு மஞ்சளோடு நறுவிரை நெளித்து" என்ற அடி திருமுருகாற்றுப்படையில் உள்ளது. இந்த அடி இறைவனுக்கே மஞ்சள் பயன்பட்டதை உணர்த்துகிறது. பழமை நிறைந்த மஞ்சள் மருத்துவத்தில் புதுமை படைப்பதென்பது வியத்தகு விந்தையாகும்.





Read more >>

Saturday 4 August 2012

வசம்பு.--மருத்துவப்பயன்கள்!





மருத்துவப்பயன்கள்-வசம்பு வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோட ு நுண்புழுக்களை அழிக்கும் தன்மை உடையது.

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.


வாய் குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.


வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.


வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.


வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில் கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.


வசம்புத் துண்டை வாயிலிட� �டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.


குழந்தைகளுக்கு உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம் சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக் குணமாகும்.


வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு தி ருந்தும்.


பசியைத் தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும். குழந்தைகளுக்கு உண்டான கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.


வயிறில் சேர்ந்த வாயுவை அகற்ற வசம ்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.


சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.


வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்த்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம அளவு இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்துவர வயிற்றுவலி, மூர்ச� ��சை, காய்சலுக்குப் பின் உண்டாகும் பலக்குறைவு, பயித்தியம், காக்காய்வலிப்பு ஆகியவை தீரும்.





Read more >>

Friday 3 August 2012

உலகின் முக்கிய தினங்கள்




 உலக ஓசோன் தினம்
உலகின் முக்கிய தினங்கள்
ஜனவரி
26
 உலக சுங்க தினம்
ஜனவரி
30
 உலக தொழுநோய ் ஒழிப்பு தினம்



பிப்ரவரி
14
 உலக காதலர் தினம்



மார்ச்
08
 உலக பெண்கள் தினம்
மார்ச்
15
 உலக நுகர்வோர் தினம்
மார்ச்
20
 உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச்
21
 உலக வன தினம்
மார்ச்
22
 உலக நீர் தினம்
மார்ச்
23
 உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
மார்ச்
24
 உலக காசநோய் தினம்
மார்ச்
28
 உலக கால்நடை மருத்துவ தினம்



ஏப்ரல்
05
 உலக கடல் தினம்
ஏப்ரல்
07
 உலக சுகாதார தினம்
ஏப்ரல்
12
 உலக வான் � �யண தினம்
ஏப்ரல்
18
 உலக பரம்பரை தினம்
ஏப்ரல்
22
 உலக பூமி தினம்
ஏப்ரல்
30
 உலக குழந்தைத் தொழிலாளர் தினம்



மே
0 1
 உலக தொழிலாளர் தினம்
மே
03
 உலக சக்தி தினம்
மே
08
 உலக செஞ்சிலுவை தினம்
மே
12
 உலக செவிலியர் தினம்
மே
14
 உலக அன்னையர் தினம்
மே
15
 உலக குடும்ப தினம்
மே
16
 உலக தொலைக்காட்சி தினம்
மே
24
 உலக காமன்வெல்த் தினம்
மே
29
 உலக தம்பதியர் தினம்
ம ே
31
 உலக புகையிலை மறுப்பு தினம்



ஜீன்
04
 உலக இளம் குழந்தைகள் தினம்
ஜீன்
05
 உலக சுற்றுப்புற தினம்
ஜீன்
18
 உலக தந்தையர் தினம்
ஜீன்
23
 உலக இறை வணக்க தினம்
ஜீன்
26
 உலக போதை ஒழிப்பு தினம்
ஜீன்
27
 உலக நீரழிவாள� �் தினம்
ஜீன்
28
 உலக ஏழைகள் தினம்



ஜீலை
01
 உலக மருத்துவர்கள் தினம்
ஜீலை
11
 உலக மக்கள் தொகை தினம்



ஆகஸ்ட்
01
 உலக தாய்ப்பால் தினம்
ஆகஸ்ட்
03
 உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்ட்
06
 உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்ட்
09
 உலக நாகசாகி தினம்
ஆகஸ்ட்
18
 உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்


< /td>

செப்டம்பர்
08
 உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர்
16
செப்டம்பர்
18
 உலக அறிவாளர் தினம்
செப்டம்பர்
21
 உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர்
26
 உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர்
27
 உலக சுற்றுலா தினம்



அக்டோபர்
01
 உலக மூத்தோர் தினம்
அக்டோபர்
02
 உலக சைவ உணவாளர் தினம்
அக்டோபர்
04
 உலக விலங்குகள் தினம்
அக்டோபர்
05
 உலக இயற்கைச் சூழல் தினம்
அக்டோபர்
08
 உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
அக்டோபர்
09
 உலக தபால் தினம்
அக்டோபர்
16
 உலக உணவு தினம்
அக்டோபர்
17
 உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர்
24
 உலக ஐக ்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர்
30
 உலக சிந்தனை தினம்



நவம்பர்
18
 உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர்
19
 உலக குடி� ��ுரிமையாளர்கள் தினம்
நவம்பர்
26
 உலக சட்ட தினம்



டிசம்பர்
01
 உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர்
02
 உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர்
10
 உ லக மனித உரிமைகள் தினம்
டிசம்பர்
14
 உலக ஆற்றல் தினம்








Read more >>

Popular Posts