Followers

Tuesday 6 March 2012

தொட்டாச்சிணுங்கி பட்டா பரு (முகப்பரு விலக) பறக்கும் ! நாட்டு வைத்தியம் !

 

தொட்டாச்சிணுங்கி பட்டா பரு பறக்கும் !

முகப்பரு விலக...

திருநீற்றுப்பச்சிலைனு ஒண்ணு கேள்விப்பட்டிருப்பீங்க. அதைப் பறிச்சிட்டு வந்து கசக்கினா, சாறு வரும். அதை முகத்தில தடவி ஒரு மணி நேரம் கழிச்சி குளிக்கணும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செஞ்சிப் பாருங்க, பருவெல்லாம் உதிர்ந்து முகம் சும்மா பளபளனு இருக்கும்.

தொட்டாச்சிணுங்கி இலையை தொட்டுத் தொட்டுப் பார்த்து விளையாடியிருப்பீங்க. அதுவும்கூட அருமையான மூலிகைங்கறது தெரியுமா..! அந்த இலைகளைப் பறிச்சுட்டு வந்து நல்லா மையா அரைச்சி முகத்துல பத்து (பற்று) போட்டுட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சீங்கனா... பருவெல்லாம் உதிர்ந்திரும்.

வெண்தேமல் மறைய...

இதை அழுக்குத் தேமல்னும் சொல்வாங்க. இதுக்கு உத்தாமணி இலைச் சாறு நல்ல மருந்து. தேமல் உள்ள இடத்துல உத்தாமணி இலைச்சாறை பூசிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிக்கணும். தொடர்ந்து செய்தீங்கனா பலன் கிடைக்கும். இதேமாதிரியே நாகமல்லி இலையை அரைச்சிப் பூசி குளிச்சுட்டு வந்தீங்கனாலும் தேமல் மறையும்.

தோல் வறட்சி நீங்க...

சோத்துக்கத்தாழை எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை பயன்படுத்துறவங்க ரொம்பக் குறைவு. சின்னத் துண்டா நறுக்கி, மேல் தோலை சீவி, உள்ளுக்குள்ள இருக்குற வெள்ளை நிற 'ஜெல்'லை முகத்தில தடவிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சுப் பாருங்க... அதோட அருமை தெரியும். தொடர்ந்து செய்திட்டு வந்தா, தோல் வறட்சி போய் முகம் பளபளனு ஜொலிக்கும். சோத்துக்கத்தாழையை உள்ளுக்குள்ளயும் சாப்பிடலாம். தோல் வறட்சி வந்த இடம் தெரியாமப் போயிரும்.

முகத்தில் கரும்புள்ளி மறைய...

பப்பாளிக்காயை கிள்ளினா பால் வரும். அதை, கரும்புள்ளி உள்ள இடத்துல தடவிட்டு குளிச்சிப் பாருங்க. சில நாள்லயே பலன் கிடைக்கும்.

மரு விலக...

சிலருக்கு முகத்துல சொரசொரப்பா மரு வரும். இதனால மனசுக்கும் கஷ்டமா இருக்கும். இதுக்கு இருக்கவே இருக்கு அம்மான் பச்சரிசி. அந்த இலையை உடைச்சா பால் வரும். அதை மரு மேலயும், அதைச் சுத்தியும் தடவிட்டு வந்தீங்கன்னா தோல் உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமா மரு மறைஞ்சி போயிரும். அந்த இலையை அரைச்சும் பூசலாம்.

முகத்தில் வளரும் முடி வளராமலிருக்க...

மஞ்சளை மையா அரைச்சி முகத்துல பூசணும். ராத்திரி தூங்கும்போதே முகத்துல பூசிரணும். காலையில முகத்தைக் கழுவிரணும். ஒரு நாள் ரெண்டு நாள் இப்படி செஞ்சதுமே முடி வளர்றது நின்னு போயிடாது. ஒரு மாசம், ரெண்டு மாசம் செஞ்சீங்கனா... நிச்சயமா பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Posts