Followers

Thursday 29 December 2011

செயலிழந்த மூளைக்கு பேஸ்மேக்கர் கருவி கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர்

 
 
இருதய கோளாறு உடையவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக `பேஸ் மேக்கர்' கருவி பொருத்துவது வழக்கம். இதுபோல, மூளைக்கும் பேஸ் மேக்கர் கருவியை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர்.


ஜெய்னே என்ற ஒரு பெண்ணுக்கு மூளையில் ஏற்பட்ட சிறிய பாதிப்பால் உடல் தசை முழுவதும் செயல் இழந்தது. இதை எம்.ஆர்.. மூலமாக நரம்பியல் டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ஜெய்னே மண்டை ஓட்டில் 8 செ.மீ. அளவுக்கு துளையிட்டு மூளையில் எலக்ட்ரோடு எனப்படும் இரண்டு `பேஸ் மேக்கர்' கருவிகளை பொருத்தினார்கள். இந்த அசாத்தியமான அறுவை சிகிச்சை காரணமாக, மீண்டும் பழைய நிலைமைக்கு ஜெய்னே திரும்பி உள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை முழுவதும் எம்.ஆர்.. ஸ்கேன் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மிகக் கவனமாக நடத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின் ஜெய்னே, "பழைய ஆளாக திரும்புவேன் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. மூன்று ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது, என்னுடைய வாழ்க்கையை திரும்ப பெற்றுள்ளேன்'' என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்
Read more >>

சுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா?

 
 

உறவு கொள்வதில் வித்தியாசத்தை விரும்புவோர் நிறைய. ஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசம், ஸ்டைல் இருக்கும். அதில் ஒன்று ஷவரில் குளித்தபடி உறவு கொள்வது, பாத்டப்பில் உறவு கொள்வது. அதேசமயம், சுடுநீரில் உறவு கொள்ளும்போது எந்தவிதமான கருத்தடை சாதனமும் தேவையில்லை. சுடுநீரில் உறவு கொள்ளும்போது கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

அது உண்மையா? டாக்டர்கள் சொல்வதைக் கேட்போம்.

எந்த முறையில் உறவு கொண்டாலும் நிச்சயம் கருத்தடை சாதனங்கள் அவசியம் - கருத்தரிப்பதை விரும்பாவிட்டால். சுடுநீரில் குளித்தால் கருத்தடை சாதனம் தேவையில்லை என்பது வினோதமாக இருக்கிறது. ஆனால் உண்மையில் அது தவறு. சுடுநீராக இருந்தாலும், குளிர்ச்சியான நீராக இருந்தாலும் விந்தனு பெண்ணுறுப்பின் வழியாக செல்வதை முறையான கருத்தடை சாதனத்தைத் தவிர வேறு எதுவுமே தடுக்க முடியாது.

மேலும், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பின் வழியாக பரவும் நோய்களைத் தடுக்கக் கூடிய தன்மையும் சுடுநீருக்குக் கிடையாது. எனவே ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் அவசியம் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேபோல சுடுநீரில் குளித்தால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ஆணுறுப்பில் பாதிப்பு ஏற்படும், விந்தனு வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் சிலருக்கு உண்டு.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், இதில் பாதி உண்மை உள்ளது. விந்தனு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்புள்ளது. உடல் சூடு அதிகரிக்கும்போது விந்தனு உற்பத்தி பாதிக்கப்படும். நமது உடலின் பிற பகுதிகளில் உள்ள வெப்ப நிலையை விட வி்ந்துப் பையின் வெப்ப நிலை 5 டிகிரி குறைவாகவே இருக்கும். அதற்கேற்றபடி விந்துப் பையானது தனது வெப்ப நிலையை சரிவிகித நிலையில் வைத்துக் கொள்ளும். அங்கு வெப்பம் அதிகரிக்கும்போது வி்ந்தனு உற்பத்தி நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் டாக்டர்கள்.
Read more >>

ஹார்மோன்களின் விளையாட்டு

 
 
 
உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவைஹார்மோன்கள்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருபத்தாறு வயது நண்பருடன்சேர்ந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை கொலை செய்து விட்டார்.மாணவர் 14 வயதுகாதலியுடன் பேசிக் கொண்டிருந்த்தை பையன் பார்த்துவிட்டான்.வெளியே சொல்லிவிடுவான்என்ற கலக்கத்தில் கொன்று விட்டார்கள்.
இம்மாதிரிபிரச்சினைகள் இன்று அதிகரித்து வருகிறது.சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த இரண்டுஆசிரியர்கள் சொன்னார்கள்,''இதெல்லாம் ஹார்மோன்களின்விளையாட்டு,அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!".ஹார்மோன்கள் என்றாலேபாலியல் தொடர்பான விஷயம் மட்டும்தானா? உடலில் பல்வேறு ஹார்மோன்கள் பலவித பணிகளைசெய்கின்றன.
 
ஆணும் பெண்ணும்ஒருவரை ஒருவர் ஈர்க்க ஹார்மோன் தான் காரணம்.பாலியல் ஹார்மோன்களின் வேலைஇது.பாலியல் உணர்ச்சி மட்டுமல்லாது பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளின்போது,சிக்கலான சூழ்நிலைகளில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உதவுகின்றது.குருதியில்கலந்து செய்தியை எடுத்துச் செல்பவை இவை.
உடல் இயக்கத்தில்ஹார்மோன்கள் முக்கிய செயல்பாட்டை கொண்டிருக்கின்றன.பிட்யூட்டரி சுரப்பியை தலைமைசுரப்பி என்பார்கள்.தலைமை என்று சொல்வதற்கு ஏற்றவாறு மூளையில்அமைந்திருக்கிறது.மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது.பலருக்கும் தெரிந்த இன்னொருசுரப்பி தைராய்டு.இதன் மிகுதியும் குறைவும் பிரச்சினையை உண்டாக்கி தொடர்மருத்துவத்துக்கு இட்டுச்செல்கிறது.
 
பெண்ணின்கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன்.பெண் தன்மையை இந்த ஹார்மோன்தான் முடிவு செய்கிறது.கர்ப்ப பை வளர்ச்சி,அழகு போன்றவை இதைச் சார்ந்துஇருக்கின்றன.இளமை இதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.இதெல்லாம் ஹார்மோன்செய்யும் வேலை என்று சொல்வார்கள்.
ஆணுக்கும்பெண்ணுக்கு உற்பத்தி திறன் பாலியல் ஹார்மோன்களை சார்ந்து உள்ளது.இளமை தடுமாற்றத்தைசந்திப்பதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகரிப்பதே காரணம்.ஆணுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரோன் உடல்மாற்றத்தை ஏற்படுத்துகிறது.நிறைய குழப்பங்களையும்,பிரச்சினைகளையும் கூட கொண்டுவருகிறது.ஆணுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இந்த ஹார்மோனும் காரணமாக இருக்கமுடியும்.
 
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் பெண்ணுக்கு சுரக்கும்ஹார்மோன் என்று பார்த்தோம்.பசுக்களில் இந்த ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்துவதாகசொல்லப்படுகிறது.அதிக பால் உற்பத்திக்காக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்செய்யும் தரக்குறைவான செயல். இவ்வாறு பால் மூலம் உடலுக்கு செல்லும் ஈஸ்ட்ரஜன் ஆண்களிடம்ஆண்மைக்குறைவை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Read more >>

Sunday 25 December 2011

காளான் சாப்பிட்டால் என்ன நன்மை?

 
 
நல்ல பசியாகஉணர்ந்தேன்.நண்பர் ஒருவருடன் அருகில் உள்ள மெஸ் நோக்கி போய்விட்டோம்..நண்பர்காளான் தோசை சாப்பிடலாம் என்றார்.கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன்,காளான் நான்கையும்தட்டில் வைத்து ஒன்று தேர்வு செய்யச்சொன்னால்,நான் காளானை தேர்ந்தெடுப்பேன்.காளான்தோசை வந்த பிறகு "இதில் காளானே இல்லை'' என்று நண்பன் சண்டைபிடிக்க ஆரம்பித்தான்.தோசையில் காளான் மசால் வைத்துக்கொடுத்தால் அது காளான் தோசை.''சிறுசிறுதுண்டுகளாக இருக்கும் சார்"என்று சமாளித்தவாறே சில துண்டுகளை வைத்தார்கள்.சண்டைபிடித்து கேட்டு வாங்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.அவர்களுக்கு அதிக காளான்துண்டுகள் கிடைக்காது.
 
இருவரும் சாப்பிடஆரம்பித்தோம்.நண்பன் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் பால்யகால நினைவுகளைசாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் மட்டுமில்லாமல் இன்று பலர் அப்ப்டித்தான்.உணவைபொறுமையாக ருசித்து சாப்பிடுபவர்கள் குறைவு.மனசு எங்கோ இருக்க கடனுக்கு விழுங்கிக்கொண்டிருப்போம்.சில நேரங்களில் அதிகமாகவோ,மிக குறைவாகவோ சாப்பிட்டுவிடுவார்கள்.சாப்பிடுவது தியானம் போல இருக்கவேண்டும்.உள்ளம் உணவில் முழுமையாககுவிந்திருக்க வேண்டும்.நான் எப்போதும் அப்படி இல்லை.ஆனால் காளான் தோசைசாப்பிடும்போது மனசு கிராமத்துக்குப் போய்விட்ட்து.
பூமியிலிருந்துகாளானை வெளிக்கொண்டு வருவது வான்மழை.நல்ல மழை பொழிந்து நிலம் குளிர்ந்திருக்கும்.சிலநேரத்து மழை மனசையும் குளிர்வித்து நல்ல மனநிலையைத் தரும்.மழை இரவின் அடுத்த நாள்காலையில் காளானைத் தேடி வயல்வெளிகளில் சுற்றுவோம்.
 
எங்காவதுமறைந்திருக்கும்.மண்ணில் வெள்ளையாக தெரிந்தால் மனம் பரபரக்க ஓடுவோம்.காளான்அப்போதுதான் மலர்ந்திருக்கும்.சில இடங்களில் கொத்தாகவும்,வேறு இட்த்தில்தனியாகவும் இருக்கும்.காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாகஇருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.
காளானை சுற்றிமண்ணை பறிக்க ஆரம்பிப்போம். தண்டு வரை முழுமையாக எடுப்பது சவால்.வீட்டுக்கு கொண்டுவந்தவுடன் அன்றைய மெனு மாறிப்போகும்.மிக அதிகமாக கிடைத்தால் பக்கத்துவீட்டுக்கும்உண்டு.கிட்ட்த்தட்ட கறிக்குழம்பு சமையல்தான்.மசாலா தயாராகும்.தயாராகும் வரை மனசுகாளானையே சுற்றிக்கொண்டிருக்கும்.எப்போதும் கிடைக்காத அபூர்வமான விஷயம்.குறிப்பிட்டகாலத்தில் இயற்கை தரும் அற்புதம்.அப்படி ஒரு சுவை.இப்போது செயற்கையாக தயாரித்துபாலிதீன் பாக்கெட்டில் வருகிறது.அரசு வேளாண்மை நிறுவன்ங்களில் பயிற்சிதருகிறார்கள்.உறவினர் ஒருவருடன் நானும் ஒரு நாள் பயிற்சிக்கு போனேன்.
 
காளான்நல்ல உண்வென்று சொன்னார்கள்.உடலுக்குத் தேவையான நல்ல பல சத்துக்கள்அடங்கியிருக்கின்றன.நாம் சாப்பிடும் குளுக்கோஸில் சேர்க்கப்படும் வைட்டமின் டிஇதில் உள்ளது.பி வைட்டமின்களும் இருக்கிறது.உடல் வளர்ச்சிக்கு தேவையான தாதுஉப்புக்களும் நிறைந்திருக்கிறது.அதிகமாக புகழ்ந்து பேசினார்கள்.ஆனால் உண்மையானவிஷயம்தான்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதேநல்லது.எனக்கு கொடுத்த பயிற்சி வீணாக போய்விட்ட்து.நான் குடிசைத்தொழிலாகசெய்யவேயில்லை.நன்மை பயக்கும் உணவுப்பொருளை உணவில் சேர்ப்போம்.குடிசைத்தொழில்வளர்ச்சிக்கு உதவியது போலவும் இருக்கும்.
Read more >>

Saturday 24 December 2011

யோகா முத்திரைகள்

 
 
 


முத்திரை யோகம் ஹதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த
"பஞ்ச மஹாபூதங்கள்" ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி. ஆகாயம் "ஈதர்" என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. வாயு உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து வாயு உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. அக்னி பித்தம். லகுவானது. வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த பஞ்சபூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – அக்னி
2. ஆள்காட்டி விரல் – வாயு
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – பூமி
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால்
உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. "பத்மாசனம்" போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு "சூன்ய முத்திரை". இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி 'பிராண முத்திரையுடன் செய்தால்' தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்கள் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
Read more >>

Thursday 22 December 2011

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

 
பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் '' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
Read more >>

Tuesday 20 December 2011

பிளாஸ்ரிக் போத்தல் தண்ணீரினால் விரைவில் பூப்படையும் சிறுமிகள்!

 
 
ள்ளிச் சிறுமிகள் இப்போதெல்லாம் பத்துப் பதினொரு வயதுகளிலேயே தங்களது குழந்தைமை கடக்கும் முன்பாகவே வெகு விரைவாகப் பூப்படைந்து விடுகிறார்கள். இ ன்றைய இளம் அம்மாக்களை வெகு வாகக் கவலை கொள்ளச் செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று.
ஏன் இப்படி ஆகிறது?!

குடும்ப வாகு, மரபியல் காரணங்கள், உணவுப் பழக்க வழக்கங்கள் இவை யெல்லாம் தாண்டி இந்த விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு பூதம் ஒளிந்து கொண்டு சமீப காலங்களாக பெண் குழந்தை களைப் பெற்ற அம்மாக்கள் எல்லோரையும் அச்சுறுத்தி வருகிறது.அதைப் பற்றியதான விழிப்புணர்வும் எச்சரிக்கையும் பொது மக்களில் எத்தனை பேருக்கு உண்டோ தெரியவில்லை!

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள நேர்ந்தாலும் சரி அல்லது குழந்தைக்குப் தாய்ப்பால் போதவில்லை என்றாலும் சரி சிலர் குழந்தை பிறந்த அன்றே கூட தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட ஃபீடிங் பாட்டில்கள் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

மகப்பேறு மருத்துவர்கள் பலர் இதை அனுமதிப்பதில்லை. ஆனாலும் குழந்தை பசியால் அழுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் இப்படிச் செய்ய நேர்கிறது. குழந்தையின் பசி தீர்ப்பதில் தவறுகள் இல்லை. ஆனால் பயன்படுத்தப்படும் பொருளில் தான் பெரும் ஆபத்து ஒளிந் திருக்கிறது.

பிறந்த குழந்தைகளின் ஃபீடிங் பாட்டில் கள் மட்டும்தான் என்றில்லை. பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் ட்ரான்ஸ்பரன்ட் ஸ்நாக்ஸ் டப்பாக்கள் இவை எல்லாமும் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக்குகள் பாலி கார்பனேட் பிளாஸ் டிக்குகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் குகளில் இருக்கும் பிஸ்ஃபீனால்கி எனும் மூலக்கூறு ஃபீடிங் பாட்டில்கள் மூலம் குழந்தைகளின் உடலுக்குள் ஊடுருவி ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பை அதிக மாக்குகிறது. இதே மூலக்கூறு ஆண் குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா? ஆண் குழந்தைகள் வளர வளர அவர்களது விந்தணுக் களின் எண்ணிக்கையை குறைக்கிறது.

வழக்கத்தை விட ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாவதால் தான் இன்றைக்குப் பெண் குழந்தைகள் பத்து, பதினொரு வயது
களி லேயே தங்களது விளையாட்டுப் பருவத்தை, பேதைமையை தொலைத்து அதிவேகமாக பூப்படைந்து விடுகிறார்கள். அதற்கு காரணம் உள்ளிருந்து மிரட்டும் மாயபூதம் இந்த பிஸ்ஃபீனால்கி தான் என்பது பொது மக்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக இந்த இதழில் காண்போமா!

குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக் கான உபயோகப் பொருட்களில் இந்த பாலிகார்போனேட் பிளாஸ்டிக்குகள் அதிக மாகப் பயன்படுத்தப் படுகின்றன, ஏனெனில்;

மிகவும் லேசானது, எடையற்றது. தரமான பிளாஸ்டிக், உறுதியானது; தோற்றத்தில் துல்லியமான கண்ணாடி போன்றது; ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது மின்சாரமோ, வெப்பமோ தாக்க இயலாதது; போன்ற லாபகரமான பிரதான காரணங்கள் இருக்கை யில் இந்தப் பிளாஸ்டிக்குகளை தயாரிப் பாளர்களும் சரி நுகர்வோர்களும் சரி எப்படி தவிர்ப்பார்கள்?

பாலி கார்பனேட் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் வேறு பொருட்கள்
வீடியோ சி.டி.க்கள், டி.வி.டி.க்கள், எலக்ட்ரானிக் கருவிகள், ஆட்டோமேடிக் விளையாட்டுப் பொருட்கள், விளையாட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு சாதனங்கள், மருத்துவ சாதனங்கள் etc... etc.

இதன் நீடித்த உழைப்பு; உடையாத் தன்மை; வெப்பம் தாங்கும் தன்மை யினால் இந்த பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பொருட்கள் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொரு ட்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.

பிஸ்ஃபீனால் (கி) என்றால் என்ன?

பிஸ்ஃபீனால் கி என்பது பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் மிக முக்கியமான கட்டு மானப் பொருள். இது ஒரு வேதிப் பொருள், இதன் பெயர் 22 பிஸ் 4 ஹைட்ராக்சி ஃபினைல் ப்ரோபேன் (22 Bis4 Hydroxy pheyl propae ).

பாலி கார்பனேட் பிளாஸ்டிக்கின் பிஸ் பினால்கி மிக மிக குறைந்த அளவில் நழுவி கரைந்து அது வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் குளிர் பானங்களில் ஊடுருவி நிற்கிறது என்று உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வறிக்கை களும் ஆராய்ச்சி முடிவுகளும் தகவல் தெரிவிக்கின்றன.

அப்படி உணவுப் பொருட்களில் கரைந்து ஊடுருவி நிற்கும் பிஸ்ஃபீனால் எவ்வளவு தெரியுமா?

0?.000000005 (5/100000000) மில்லிகிராம் அளவு அதாவது கோடியில் 5 மடங்கு தான். ஒருநாளில் நம் எடையின் ஒரு கிலோவுக்கு 0.0000125 மில்லி கிராம் அளவு பிஸ்ஃபீனால்கி நமக்குத் தெரியாமலே நமது உடலுக்குள் சென்று விடுகிறது.

பிஸ்ஃபீனால்கி என்னவெல்லாம் செய்கிறது?

இது மனிதனின் ஹார்மோன்களை நரம்பியல் செயல்பாடுகளைப் பாதிக்கிறது, ஜீன்களின் தன்மையை மாற்றி அமைக்கும் குணமுடையது என்று அறிவியல் சொல் கிறது. பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கில் இருந்து கரையும் பிஸ்ஃபீனால்கி பெரியவர் களைவிட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

முக்கியமாக பிறந்த குழந்தையிலிருந்து 18 மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு பிஸ்ஃபீனால் பாதிப்பு வழக்கத்தை விட நான்கு மடங்கு அதிகரிக்கிறது.

ஏனெனில் 3 மாத குழந்தையின் எடை சுமாராக 6 கிலோ தான். அப்படியெனில் பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கின் கோரமுகங்கள்...

பாலிகார்பனேட் பிளாஸ்டிக்கால் ஆன பால் பாட்டில். தண்ணீர் பாட்டிலை சூடான நீரில் கழுவும்போது அல்லது சூடான பாலை ஊற்றும்போது பாலிகார்பனேட் பிளஸ்டிக்கில் உள்ள பிஸ்ஃபீனால்கி கரைந்து பாட்டிலுக்குள் உள்ள உணவில் கலந்து ஊடுருவி குழந்தையின் வயிற்றுக் குள்ளும் நுழைகிறது.

இதன் விளைவு என்ன?

வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தை யின் மூளையைப் பாதிக்கிறது
இந்தக் குழந்தைகள் சீக்கிரமே பருவ வயதை எட்டுகின்றன.

தற்காப்பு சக்தியின் சமன் தன்மை தடுமாறுகிறது.

இவர்கள் தங்கள் வாழ்நாளின் பிற் பகுதியில் பருமன், சர்க்கரை நோய், புற்று நோய்க்கு ஆளாகிறார்கள்.

பாதிப்பு?!

பிஸ்ஃபீனால்கி எனும் வேதிப்பொருள் 1938இல் கண்டுபிடிக்கப்பட்டது, இது செயற்கை
ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது.இதனால் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும்.

பிஸ்ஃபீனால்கி குழந்தைகளின் உடலில் ஈஸ்ட்ரோஜென் போலவே செயல்படும்.

நரம்பு மற்றும் நடத்தை தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.

எதிர்காலத்தில் ப்ராஸ்டேட் (PROSTATE) மற்றும் மார்பகப் புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லாம் சரி தான்... ஆனால் பாட்டிலில் பிஸ்ஃபீனால்கி உள்ளது என எவ்வாறு கண்டுபிடிப்பதாம் ?

அது ரொம்ப ஈசி தாங்க!

பாட்டிலின் அடிப்பகுதியில் '7' என்ற எண் இருக்கும். ஒரு முக்கோணம் காணப் படும், அதற்கு அருகில் 'PC' (Polycarboate) என்ற எழுத்து இருக்கும், இப்படி குறிப்பிட்டிருந்தால் அந்த பிளாஸ்டிக்கில் பிஸ்ஃபீனால் உள்ளது என்று அறியலாம்.

முக்கோணத்திற்குள் காணப்படும் எண் ப்ளாஸ்டிக்கின் தரம் பற்றி குறிப்பிடும், இவற்றில் 1, 2, 23 எண்களிருப்பின் அவை மிகவும் தரம் குறைந்தவை.

3, 5, 7 எண் இருந்தால் பிளாஸ்டிக்கின் தரம் பரவாயில்லை.

சரி குழந்தைகளை பிஸ்ஃபீனால்கி யின் தாக்குதலில் இருந்து எப்படிக்காப்பாற்றுவது?!

கண்ணாடி பாட்டில்களைப் பயன் படுத்தலாம்.

தொடர்ந்து பாலிகார்பனேட் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்தினால் பாட்டில் களை வெறும் சோப்பு நீரில் மட்டும் கழுவ வேண்டும். டிடர்ஜென்ட் அல்லது டிஷ்வாஷ் பார் பயன்படுத்தக் கூடாது.

பாட்டில் சூடாவதைத் தவிர்க்க வேண்டும். பாட்டிலை சூடான நீரில் கழுவுவதோ, வெயிலில் காயவைப்பதோ கூடாது.
Read more >>

பேனை விரட்டும் பேய்த்துளசி!

 
 
நாய்த்துளசி நாம் பரவலாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். பேய்த்துளசி கேள்விப்பட்டிருக்கிறோமா?
நாய்த்துளசி, சங்கரத்துளசி, பேய்த் துளசி மற்றும் கஞ்சாங்கோரை என்பன எல்லாம் ஒரே மூலிகையே. இந்தத் தாவரத்தின் உயிரியல் பெயர்: ளிசிமிவிஹிவி சிகிழிஹிவி. லிகிவிமிகிசிணிகிணி. என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதுவும் துளசிக் குடும்பத்தைச் சேர்ந்ததே.

இதன் இலை, விதை மற்றும் பூ ஆகிய பாகங்கள் மருத்துவப் பயன்பாடுகள் நிறைந்தவை.

கஞ்சாங்கோரை ஒரு சிறு செடியினம். எல்லா வகை மண்ணிலும் வளரக்கூடிய தன்மை உடையது. எதிரடுக்கில் அமைந்த இலைகளை உடையது, இவ்விலைகள் நல்ல மணமுடையது. கதிர் போல மின்னும் அழகிய பூங்கொத்துகளைக் கொண்டது. மழைக் காலங்களில் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே அடர்த்தியாக வள ர்கிறது. விதை மூலம் இனவிருத்தி நடைபெறுகிறது.

மருத்துவம் என்று சொல்லும்போது இதன் இலை கோழையை அகற்றும். எல்லா வகையான இருமலையும் போக்கும், உடலில் வியர்வையைப் பெருக்குதல், குளிர்ச்சியான உடலில் வெப்பத்தை அதிகப் படுத்தும், அதன் மூலம் ஆற்றலை அதிகப் படுத்தும், விதை தாதுவெப்பு அகற்றும் தன்மையை உடையது.

பேய்த்துளசி இலைகளில் 25 அல்லது 30 எடுத்து அரைத்துச் சாறு பிழிந்து அச் சாற்றைப் பாலுடன் கலந்து குழந்தை களுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இரு மல், சளி ஆகியவை குணமாகும்.

பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கலந்து குடித்துவரக் கபம் என்னும் மார்புச் சளி கரைந்து சளி வெளியாகும். காசம், இருமல், ஆரம்ப என்புருக்கி ஆகிய நோய் களும் இம்மருந்தால் குணமாகும்.

இலையை நன்கு மைய அரைத்துச் சுண்டைக்காயளவு எடுத்துத் தயிரில் கலந்து காலை, மாலை இரு வேளையும் குடிக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் எல்லாம் பறந்து போகும்.

இதனை இப்படியும் செய்யலாம். இலையை உலர்த்திப் பொடித்
து டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டு 5 கிராம் பேய்த்துளசிப் பொடியை 100 மி.லி. வெந்நீரில் ஒரு ஐந்து நிமிடம் ஊறவைத்து பின் வடிகட்டி, சிறிது பாலும் தேவை யென்றால் சிறிதளவு சர்க்கரையும் கலந்து காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும். மீண்டும் அருகில் வரவும் அஞ்சும்.

மூல நோய் உள்ளவர்களுக்கு இது வலி, நோய் இரண்டையும் போக்கும் அரு மருந்து. இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளஞ்சூட்டில் மூலம் காணப் படும் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் வலி, அரிப்பு ஆகியவை நிர்மூலம் ஆகி விடும்.

சொறி, சிரங்கு உள்ள சிலர் பேய் போல எப்போதும் உடலைச் சொறிந்து புண்ணாக்கிக் கொள்வர். இதற்குப் பேய்த் துளசி இலையை அரைத்துத் குளிக்கும் போது உடலில் தடவிக் குளித்தால் இதமாக இருப்பதுடன் சொறி, சிரங்கு முற்றிலும் தீரும்.

கஞ்சாங்கோரை இலைப் பொடி 10 கிராம், மிளகுத்தூள் 1 கிராம் சேர்த்து வெந்நீரில் கலந்து கொடுக்க எலும்புருக்கி நோய் குறையும்.

சிலருக்கு தலையில் மட்டுமல்ல உடலி லும் பேன் தொல்லை காணலாகும். எப் போதும் தலையிலும் உடலிலும் கை களால் பிடில் வாசித்துக் கொண்டே இருப் பார்கள். சிலர் கைகளில் கிடைக்கும் கத்தி உட்பட எல்லா விதக் கருவிகளையும் பயன்படுத்தி உடலில் இசை மீட்டுவார்கள். இவர்கள் பேய்த்துளசிப் பூவுடன் சிறிது வசம்பு சேர்த்து அரைத்துத் தலையிலும் உடலிலும் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளித்து வந்தால் ஒரு வாரத்தில் பேன் தொல்லை ஒழியும்.

இலக்கியச் செய்திகள்

'ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு?' என்னும் எட்டாம் நூற்றாண்டில் தோன்றி மருத்துவ நூலில் இச்செடியின் குறிப்பு காணலாகிறது.

வழக்கம் போல ஒரு சுவையான செய்தி என்னவென்றால், தமிழகத்தில் ஆதிகாலத் தில் தயாரிக்கப்பட்ட மதுவில், அதாவது 'அதியனும் ஔவையும் மாந்தி மகிழ்ந் தார்கள்' என்று வெவ்வேறு குரல்களில் இன்றளவும் ஒலிக்கப்படும் மதுவில் ஒரு மூலக்கூறாக இந்தக் கஞ்சாங்கோரை பயன்பட்டுள்ளது.
Read more >>

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்!

 
 
http://www.tamilcnn.com/upload-files/dec_2011/medical/sitha.jpgசீதாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.
சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும்.
2. சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் புசி வர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8. சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.
9. சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.
10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும்.
Read more >>

Popular Posts