Followers

Wednesday 23 November 2011

வாயுத்தொல்லை,அலர்ஜிக்கு பெருங்காயம்.

 
 
பெருங்காயம்வாசனைப்பொருளாக சேர்க்கப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் வாதநோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.நமது பாரம்பர்ய உணவில் சேர்க்கப்படும்பொருட்களுக்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்வது கடினம்.பெரும்பாலானவை மருத்துவ குணம்கொண்டவை.தவிர்க்க கூடாதவை.
அன்று மதியம்இரண்டு மணியை தாண்டிவிட்ட்து.நல்ல பசி.நானும்,பால்யகால நண்பனும் கிராமத்திற்குதிரும்பிக் கொண்டிருந்தோம்.நெடுஞ்சாலையில் ஒரு தாபா ஓட்டலை பார்த்தவுடன்சாப்பிட்டுவிட்டு போகலாமென முடிவு செய்து உள்ளே நுழைந்துவிட்டோம்.உள்ளே போய்உட்கார்ந்தவுடன் நான் பீர் குடிக்கப் போகிறேன் என்றான் நண்பன்.அவன் முடிவுசெய்தால் செய்த்துதான்.
கூலிங் பீர் இல்லைஎன்று சொல்லிவிட்டார்கள்.அன்று முழுக்க மின் தடையால் பிரச்சினை.நண்பனின் முகம்மாறினாலும் ஆசை மட்டும் போகவில்லை.எரிச்சலுடன் சரி கொடுங்கள் என்றுசொல்லிவிட்டான்.குடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முகத்தை தடவிக்கொண்டிருந்தான்.எழுந்து போய் கண்ணாடியில் பார்த்துவிட்டு வந்தான்.
அப்போதுதான்கவனித்தேன்.முகத்தில் அங்கங்கே லேசாக கொப்புளங்கள் போல வீங்கஆரம்பித்திருந்த்து.எனக்கு கூலிங் இல்லாமல் பீர் குடித்தால் ஒத்துக்கொள்ளாதுஎன்றான்.எனக்கு பயம் ஏற்பட்டுவிட்ட்து.அவனோ அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை.ஏற்கனவேஅவனுக்கு அனுபவம் இருந்திருக்கிறது.சப்ளையரை அழைத்து பெருங்காயம் இருக்கிறதா?" என்றுகேட்டான்.
சப்ளை செய்பவர்பெருங்காயத்தை தூள் செய்து எடுத்துவந்து கொடுத்தார்.குழம்பில் லேசாக தூவி சாப்பிடஆரம்பித்தான்.நான் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.முகத்தில் இருந்த கொப்புளங்கள் கொஞ்சம்கொஞ்சமாகமறையத்தொடங்கிவிட்ட்து.சாப்பிட்டு முடிப்பதற்குள் முகம் இயல்பான நிலைக்குவந்துவிட்ட்து.
வாயுத்தொல்லை,வயிற்றுப்பொருமல் போன்றதொல்லைகளுக்கு பெருங்காயத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.கிராமங்களில்வாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத்தை வைத்து உண்பார்கள்.தோல் அலர்ஜிக்குபயன்படுத்தப்படுவதை அன்றுதான் நேரில் பார்த்தேன்.
பெருங்காயம்மிளகுத்தூள் போன்றவற்றில் சேர்ப்பார்கள்.அப்புறம் ஊறுகாய்களில் முக்கிய பொருளாகஇருக்கிறது.சீக்கிரம் கெட்டுப்போகாது என்று சொல்வார்கள்.நுண்ணுயிரிகளுக்கு எதிராகசெயல் புரியும் தன்மை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
மரபு சார்ந்துநம்முடைய உணவுப் பொருளில் சேர்க்கப்படுபவற்றை இந்த காரணத்திற்காக என்றுவரையறுப்பது கஷ்டம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன.முன்னோர்கள்தங்களது ஆரோக்கியத்தை உணவுப்பொருட்களில் கொண்டிருந்தார்கள்.
இந்தியமருத்துவ முறைகளுக்கு அப்பாற்பட்டும் கூட பாட்டி வைத்தியம் பரவலாக பலன் தருவதாகஇருப்பதை அறிய முடிகிறது.வரும் காலங்களில் ஒவ்வொன்றுக்குமான அறிவியல் காரணங்களைமேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்து நமக்கு வழங்குவார்கள்.அவர்களே காப்புரிமைபெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.
 

No comments:

Post a Comment

Popular Posts